கையளவு


ஆற்றங்கரையில்  
கையில் எட்டிய தண்ணீரை  
அள்ளி அருந்தினேன்.  

ஆறு போல் பாயும் வாழ்க்கையில்  
எட்டியது  
கையளவுதான்.

அறிவன் பெருமான்