நான் எங்கு செல்வேன்?


இந்த நாட்டை
விரும்புகிறாயா?” என்றேன்.

“நான் எங்கு செல்வேன்?” என்றான்.

அது என்ன பதில்?
என கேட்க நினைத்தேன்.

அவனது நாட்டில்
தொடர்ந்து போர் நடப்பது
நினைவுக்கு வந்து,
என் குரல்
மௌனமானது.

அறிவன் பெருமான்