வேட்கை


பற்று இல்லாமல் இரு
ஆசை இல்லாமல் இரு
பொருள் இல்லாமல் இரு

உனக்குள் ஆழ்ந்து
ஒன்றும் இல்லாமல் இரு
என்று இருப்பதற்கு
ஏகப்பட்ட
தத்துவங்கள் இருக்கின்றன.

ஆனால்,
பணம் இருக்கும்வரை தான்
இந்த வாழ்வு இனிக்கும்
என்பதை உணரவில்லை எனில்
ஒரு நொடிப்பொழுதும்
பின்னொரு நாளில் கசக்கும்.

பெருமான் பெருவேல்



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *