பிறந்த இடம் நோக்கி


வருமானம் தரும் வேலை இல்லை,
இந்நகரத்தில் இனி
குடியிருக்க முடியாது.
சமாளிக்க இயலாது.
கவனிக்கவும்,
அரவணைக்கவும் யாருமில்லை
எனத் தோன்றும் போது,
பிறந்த ஊர் நோக்கி,
அறிந்த சாதியினரும்
உறவினரும் இருக்கும்
இடம் நோக்கி,
வயோதிகத்தில் செல்வதை
தவிர்க்க இயலவில்லை.

அறிவன் பெருமான்



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *